Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : நவ 07, 2024 08:41 AM


Google News
Latest Tamil News
வி.மித்ரன், விக்ஞான்நகர், பெங்களூரு.

*உயர்ந்த உதவி எது?

ஏழைக்கு உதவுவதே உயர்ந்த உதவி.

வி.ஷாலினி, வாடிப்பட்டி, மதுரை.

*சிறந்த நண்பன்...

துன்பத்தில் கைகொடுப்பவனே.

அ. லோகேஷ், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை.

*மாடத்தில் இருந்து மருந்துக்காக துளசி இலையை பறிக்கலாமா?

அது வழிபாட்டுக்கு உரியது. அதனால் வேறு துளசி செடியில் பறிக்கலாம்.

ஆர். பிரியா, ரோகிணி செக்டார், டில்லி.

*வெற்றி, திருப்தி எது சிறந்தது?

வெற்றி நிரந்தரம் அல்ல; திருப்தியே சிறந்தது.

த. நாகமுத்து, மைலாடி, கன்னியாகுமரி

*மாவிலை தோரணத்தில் எத்தனை மாவிலைகள் இருக்க வேண்டும்?

குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க வேண்டும்.

ர. ராஜா, கண்டமங்கலம், புதுச்சேரி

*நீரில் குழைத்து திருநீறு பூசலாமா?

தீட்சை பெற்றவர்கள் மட்டும் இப்படி செய்யலாம்.

ம. சிவாஜி, போத்தனுார், கோயம்புத்துார்.

*சந்திர தரிசனத்தால் நன்மை உண்டா?

மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் நீங்கும்.

ம.பரசுராம், சிதம்பரம், கடலுார்.

*கெட்ட கனவு வராமல் தடுக்க...

படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்கையை வழிபடுங்கள்.

அ.மாதவன், உக்கிரன் கோட்டை, திருநெல்வேலி.

*பிடித்த காய், பழத்தை கயா யாத்திரையில் கைவிடச் சொல்வது ஏன்...

ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் நோக்கம்.

மா.முத்து, வாகரை, திண்டுக்கல்.

*கருட புராண புத்தகம் வீட்டில் இருக்கலாமா?

இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை படிப்பர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us