ADDED : அக் 17, 2024 08:55 AM

கே.சிம்மா, பூவசரங்குப்பம், விழுப்புரம்.
*வாழ்க்கையை தீர்மானிப்பது யார்?
முற்பிறவியில் அவரவர் செய்த பாவ புண்ணியத்தின் படி வாழ்க்கை அமையும். அதை தெய்வத்தின் கட்டளைப்படி கொடுப்பது நவக்கிரகம்.
ரா.விவேகானந்தன், அய்யாத்தோப்பு, கன்னியாகுமரி.
*எழுதும் போது 'உ' என தொடங்குவது ஏன்?
பிரணவ மந்திரமான 'ஓம்' என்பதன் சுருக்கம் 'உ'. மங்கலத்தின் அடையாளமாக இதை எழுதுகிறோம்.
சி.கவிதா, வீரபாண்டி, தேனி.
*கருட புராணம் எதைப் பற்றி சொல்கிறது?
இறந்த பின் உயிரின் நிலை, பாவம் செய்த உயிர்களின் கஷ்டங்கள், இறந்தவருக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை விளக்குகிறது. இதை துக்க வீட்டில் படிப்பர்.
டி.வைஷ்ணவி, நங்கநல்லுார், சென்னை.
*கர்மா எத்தனை?
1. முற்பிறவிகளில் செய்தது சஞ்சிதம்.
2. இப்பிறவியில் நம்முடன் வந்தது பிராப்தம்.
3. நாம் செய்து கொண்டு இருப்பது ஆகாமியம்.
சி.கார்த்திகா, கல்யாண்புரி, டில்லி.
*சுவாமிக்கு கதர்துணி சாத்தலாமா?
சாத்தலாம். இதை கார்ப்பாச வஸ்திரம் என்கிறோம்.
எம்.பவி, சிவாஜி நகர், பெங்களூரு.
*கமலா சப்தமியன்று யாரை வழிபடலாம்?
கமலா சப்தமி என்பது பங்குனி வளர்பிறை சப்தமியாகும். அன்று சூரியன், மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். கண்நோய் தீரும்.
வி.குமார், பசுமலை, மதுரை.
*குருதோஷம் தீர...
வியாழக்கிழமையன்று விரதம் இருங்கள். மாலையில் தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலையோ அல்லது குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலையோ சாத்துங்கள்.
பி.அழகேசன், தச்சநல்லுார், திருநெல்வேலி.
*சிவனுக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை என்ன செய்யலாம்?
சிறிதளவு நீர்நிலையில் கரைத்து விட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம்.
மு.வெண்ணிலா, அலகுமலை, திருப்பூர்.
*வீட்டில் பூஜை செய்ய பழத்தை மட்டும் நைவேத்யம் செய்யலாமா?
படங்களாக இருந்தால் பழங்களையும், சிலையாக இருந்தால் அன்னத்தையும் சேர்த்து நைவேத்யம் செய்யுங்கள்.
*வாழ்க்கையை தீர்மானிப்பது யார்?
முற்பிறவியில் அவரவர் செய்த பாவ புண்ணியத்தின் படி வாழ்க்கை அமையும். அதை தெய்வத்தின் கட்டளைப்படி கொடுப்பது நவக்கிரகம்.
ரா.விவேகானந்தன், அய்யாத்தோப்பு, கன்னியாகுமரி.
*எழுதும் போது 'உ' என தொடங்குவது ஏன்?
பிரணவ மந்திரமான 'ஓம்' என்பதன் சுருக்கம் 'உ'. மங்கலத்தின் அடையாளமாக இதை எழுதுகிறோம்.
சி.கவிதா, வீரபாண்டி, தேனி.
*கருட புராணம் எதைப் பற்றி சொல்கிறது?
இறந்த பின் உயிரின் நிலை, பாவம் செய்த உயிர்களின் கஷ்டங்கள், இறந்தவருக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை விளக்குகிறது. இதை துக்க வீட்டில் படிப்பர்.
டி.வைஷ்ணவி, நங்கநல்லுார், சென்னை.
*கர்மா எத்தனை?
1. முற்பிறவிகளில் செய்தது சஞ்சிதம்.
2. இப்பிறவியில் நம்முடன் வந்தது பிராப்தம்.
3. நாம் செய்து கொண்டு இருப்பது ஆகாமியம்.
சி.கார்த்திகா, கல்யாண்புரி, டில்லி.
*சுவாமிக்கு கதர்துணி சாத்தலாமா?
சாத்தலாம். இதை கார்ப்பாச வஸ்திரம் என்கிறோம்.
எம்.பவி, சிவாஜி நகர், பெங்களூரு.
*கமலா சப்தமியன்று யாரை வழிபடலாம்?
கமலா சப்தமி என்பது பங்குனி வளர்பிறை சப்தமியாகும். அன்று சூரியன், மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். கண்நோய் தீரும்.
வி.குமார், பசுமலை, மதுரை.
*குருதோஷம் தீர...
வியாழக்கிழமையன்று விரதம் இருங்கள். மாலையில் தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலையோ அல்லது குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலையோ சாத்துங்கள்.
பி.அழகேசன், தச்சநல்லுார், திருநெல்வேலி.
*சிவனுக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை என்ன செய்யலாம்?
சிறிதளவு நீர்நிலையில் கரைத்து விட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம்.
மு.வெண்ணிலா, அலகுமலை, திருப்பூர்.
*வீட்டில் பூஜை செய்ய பழத்தை மட்டும் நைவேத்யம் செய்யலாமா?
படங்களாக இருந்தால் பழங்களையும், சிலையாக இருந்தால் அன்னத்தையும் சேர்த்து நைவேத்யம் செய்யுங்கள்.