Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : செப் 20, 2024 07:28 AM


Google News
Latest Tamil News
எம்.மைதிலி, ஆர்.கே.புரம், டில்லி.

*சாப்பிட்டதும் தட்டில் கை கழுவலாமா?

சாப்பிடும் தட்டு புனிதமானது என்பதால் அதில் கை கழுவக்கூடாது.

எம்.அனிதா, நத்தம், திண்டுக்கல்.

*சுவாமிக்கு கண்ணாடி காட்டுவது ஏன்?

பூஜையின் போது பதினாறு உபசாரம் (ஷோடச உபசாரம்) செய்ய வேண்டும். அதில் ஒன்று கண்ணாடி காட்டுதல்.

ஆர்.சீதா, வில்லியனுார், புதுச்சேரி.

*தரையில் விழுந்த பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாமா?

பவழமல்லி தவிர மற்ற பூக்களை பயன்படுத்தக் கூடாது.

வி.ரமேஷ், ஆயக்குடி, தென்காசி.

*கோயில் கொடிமரத்தில் உப்பு, மிளகு கொட்டுவது ஏன்?

தோல் நோய், கொப்பளம் மறைய நேர்த்திக்கடனாக இதைச் செய்வர்.

எஸ்.வினித், ஜெயந்தி நகர், பெங்களூரு.

*ஒற்றுமையுடன் வாழ ஒரு ஸ்லோகம் சொல்லுங்கள்.

மாதாச பார்வதீதேவி

பிதாதேவோ மகேஸ்வர

பாந்தவா: சிவபக்தாஸ்ச

ஸ்வதேசோ புவனத்ரயம்||

நம் தாய் பார்வதி, தந்தை சிவன், பக்தர்கள் நம் சகோதரர்கள், மூவுலகும் நம் சொந்த ஊர். இதை தினமும் சொல்லி வழிபடுங்கள்.

ஆர்.பிரபு, சிவகாசி, விருதுநகர்.

*கடவுளுக்கு நைவேத்யம் செய்வது ஏன்?

நைவேத்யம் என்றால் 'தெரிவிப்பது' என பொருள். இதன் மூலம் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்.

எம்.விக்னேஷ், பல்லடம், திருப்பூர்.

*விழாக்களில் மங்கள இசை தவிர மற்றவை இசைக்கலாமா?

மங்கள இசை தவிர பக்தி பாடல்களை மட்டும் ஒலி பரப்பலாம்.

கே.மணி, எழும்பூர், சென்னை.

*பசுவதை செய்யலாமா?

கூடாது. அப்படி செய்தால் 21 தலைமுறைக்கும் அந்த பாவம் தொடரும்.

ஆர்.பார்த்திபன், தோவாளை, கன்னியாகுமரி.

*கல்யானைக்கு கரும்பு கொடுத்த சித்தர் எங்குள்ளார்?

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இவருக்கு சன்னதி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us