Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : செப் 12, 2024 04:06 PM


Google News
Latest Tamil News
எம்.அனிதா, ஜனக்புரி, டில்லி.

*முன்னேறத் துடிப்பவருக்கு...

* விடாமுயற்சி, உழைப்பு, உற்சாகம் இவற்றோடு அனுபவசாலிகளின் யோசனை அவசியம்.

ம.விசாலாட்சி, வில்லியனுார், புதுச்சேரி.

*கோயிலில் திருவிழா நடத்தாவிட்டால் தோஷமா...

திருப்பணி நடந்தால் திருவிழா தேவையில்லை. காரணம் இன்றி நிறுத்தினால் தோஷம் வரும்.

மு.ஆதிரா, அலகுமலை, திருப்பூர்.

*புனித நதியில் நீராடாமல் தலையில் மட்டும் தெளிக்கலாமா?

நீராட முடியாத போது மட்டும் தெளிக்கலாம்.

வே.பத்மநாபன், சிவகிரி, தென்காசி.

*துலாபாரம் என்றால்...

கோயிலில் உள்ள தராசில் அமர்ந்து எடைக்கு எடை அரிசி, பழம், வெல்லம், உப்பு என காணிக்கை செலுத்துவது துலாபாரம்.

ஆ.சந்தானம், மடிக்கேரி, மைசூரு.

*பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட்டால்...

மனநலம், உடல்நலம், தொழில் வளர்ச்சி, திருமண யோகம், குழந்தைப்பேறு கிடைக்கும்.

ரா.ராதா, மேலுார், மதுரை.

*ரதி, மன்மதன் கோயில் எங்குள்ளது?

ரதி, மன்மதன் சிலைகள் கோயில் துாண்களில் இருக்கும். திருமணத்தடை விலக இவர்களை வழிபடுங்கள்.

தே.சிதம்பரநாதன், ஸ்ரீமுஷ்ணம், கடலுார்.

*சாத்துக்கை, சாத்துக்கால் என்றால்...

ஒரு தெய்வத்தை வேறொரு தெய்வமாக அலங்கரிப்பது சாத்துக்கை, சாத்துக்கால். ஆனால் தெய்வத்தின் முகத்தை மட்டும் மாற்றக் கூடாது.

க.அமரன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.

*ஹோமம் செய்தால்...

நோய் தீர்வதோடு பாவமும் விலகும்.

ச.குத்தாலம், குளச்சல், கன்னியாகுமரி.

*மாலையில் அரசமரத்தை சுற்றலாமா?

மாலை 6:00 மணிக்கு பிறகு சுற்றக் கூடாது.

ப.பரமேஸ்வரி, ஆண்டிபட்டி, தேனி.

*இரவில் ஜாதகம் பார்க்கலாமா?

பகலில் பார்ப்பது நல்லது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us