Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/நீயாக இரு

நீயாக இரு

நீயாக இரு

நீயாக இரு

ADDED : மார் 31, 2024 09:21 AM


Google News
கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், 'ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது' எனக் கேட்டது. 'காட்டின் ராஜாவான சிங்கம் எங்களை அழைத்ததால் பயத்துடன் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்' என்றது மான். அதைக் கேட்டதும் சிங்கத்தின் வீரத்தை மனதில் நினைத்த படியே கழுதை சிறிது துாரம் நடந்தது. வழியில் கிடந்த சிங்கத் தோலை எடுத்து போர்த்திக் கொண்டது. இதைக் கண்ட மற்ற விலங்குகளும் மரியாதையுடன் நடத்தின. இதனால் கழுதை ஆணவம் கொண்டது.

அந்த வழியாக வந்த ஒரு நரி, கழுதையிடம் பேச்சுக் கொடுக்க அதன் குட்டு வெளிப்பட்டது. பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது தங்களுக்கே தெரியும் தானே. நீங்கள் நீங்களாக இருக்கும் வரை எந்த பிரச்னையும் உங்களை நெருங்காது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us