Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/உயிரா... வாழ்வா...

உயிரா... வாழ்வா...

உயிரா... வாழ்வா...

உயிரா... வாழ்வா...

ADDED : ஜன 10, 2025 11:27 AM


Google News
நாய்க்குட்டி விற்பனைக்கு என்ற பலகையை ஒரு வீட்டின் முன் கண்டான் டேவிட். அதன் உரிமையாளரிடம், 'நாய்க்குட்டியின் விலை என்ன' எனக் கேட்க அதற்கு அவர், '1000 முதல் 2000 ரூபாய் வரை' என்றார். ' நாயைப் பார்க்கலாமா' எனக் கேட்டான். அவர் விசிலடித்தார்.

வீட்டுக்குள் இருந்து குட்டிகள் ஓடி வந்தன. அதில் ஒன்று மட்டும் தாமதமாக வந்தது. அதைக் கவனித்த சிறுவன், 'ஏன்... என்னாச்சு. மெதுவாக வருகிறதே' எனக் கேட்டான். 'இதன் கால்கள் சரியாக வளர்ச்சி பெறவில்லை. மெதுவாகத் தான் நடக்கும்' என்றார் அவர். 'எனக்கு இந்தக் குட்டி வேண்டும்' என்றான். 'இலவசமாக பெற்றுக் கொள்' என்றார் உரிமையாளர். 'இலவசமாக வேண்டாம். விலையை சொல்லுங்கள்' என்றான். அதற்கு அவர், 'இது நடக்கவே கஷ்டப்படுகிறது. உன்னுடன் விளையாடாதே' என வருத்தமுடன் சொன்னார்.

உடனே 'நான் ஊனமுற்றவன்' என தன் காலைக் காட்டினான்.

' இதன் கஷ்டம் எனக்கு புரியும்' என்றான் டேவிட்.

''உன் வலியை உணர முடிந்தால் நீ உயிரோடு இருக்கிறாய். மற்றவரின் வலியை உணர முடிந்தால் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்'' என்கிறது பைபிள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us