Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/சிலிக்கான் வேலி கல்லூரியில் இந்திய மாணவர்கள் தலைமைக்கு தேர்வு

சிலிக்கான் வேலி கல்லூரியில் இந்திய மாணவர்கள் தலைமைக்கு தேர்வு

சிலிக்கான் வேலி கல்லூரியில் இந்திய மாணவர்கள் தலைமைக்கு தேர்வு

சிலிக்கான் வேலி கல்லூரியில் இந்திய மாணவர்கள் தலைமைக்கு தேர்வு

மே 18, 2024


Google News
Latest Tamil News
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள சான் ஜோஸ் நகரக் கல்லூரியில் தலைமைப் பதவிகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் சிட்டி கல்லூரியில் (SJCC) SJCC மாணவர் நிர்வாகக் குழுவின் தலைவராக பிரியம் டேட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே ஆளும் குழுவின் மாணவர் அறங்காவலராக பிரதம் டேட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



ப்ரியமும் பிரதமும் தற்போது அங்குள்ள கணினி அறிவியல் திட்டத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளனர், இவர்கள் கல்வியில் மட்டும் சிறந்து விளங்கவில்லை. அவர்கள் பல்வேறு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சர்வதேச ஸ்கேட்டர்கள். இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2019 (தேசிய குழந்தை விருது) ப்ரியாம் டேட் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த காலங்களில் ஆந்திர மாநில அரசால் அர்ஜுனா விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us