Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் தமிழக மாணவி அனன்யா மணிகண்டனுக்கு வீர் பால்திவஸ் வீரதீர விருது

துபாயில் தமிழக மாணவி அனன்யா மணிகண்டனுக்கு வீர் பால்திவஸ் வீரதீர விருது

துபாயில் தமிழக மாணவி அனன்யா மணிகண்டனுக்கு வீர் பால்திவஸ் வீரதீர விருது

துபாயில் தமிழக மாணவி அனன்யா மணிகண்டனுக்கு வீர் பால்திவஸ் வீரதீர விருது

டிச 28, 2024


Google News
Latest Tamil News
துபாய்: ஷார்ஜாவில் உள்ள தில்லி பிரைவேட் பள்ளிக்கூடத்தில் படித்து வரும் தமிழக மாணவி அனன்யா மணிகண்டன், துபாயில் உள்ள குருநானக் தர்பாரில் டிசம்பர் 26-ம் தேதி இந்திய சிறுபான்மையினர் மையத்தால் (IMF) நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்வில், புகழ்பெற்ற வீர் பால்திவஸ் வீரதீர விருதைப் பெற்றார்.

குரு கோவிந்த் சிங் மகன்களின் உயிர்த் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 26-ம் தேதி வீர் பால் திவஸ் தினமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், அனன்யா , தனது துணிச்சல், சிறந்த பேச்சு திறன், படைப்பாற்றல், கல்வி, கலை, நாடகங்களில் சாதனை, மற்றும் சுற்றுச்சூழல், மனநல விழிப்புணர்விற்கான சமூகத் திட்டங்களில் மகத்தான பங்களிப்புக்காக பாராட்டப்பட்டார்.



ராஜ்ய சபா உறுப்பினரும் இந்திய சிறுபான்மை சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளருமான சத்னாம் சிங் சந்து, துணை தூதரக அதிகாரி யதின் படேல், துணைத் தூதரக அதிகாரி சுரேந்தர் சிங் கண்டாரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மேலும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சி, துணிவு, ஒற்றுமை மற்றும் இளைஞர்களின் தியாகத்தின் பாரம்பரியத்தைப் போற்றுவதாக அமைந்தது.



- நமது செய்தியாளர் காஹிலா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us