Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் பஹ்ரைன் சமூக சேவகருக்கு விருது

துபாயில் பஹ்ரைன் சமூக சேவகருக்கு விருது

துபாயில் பஹ்ரைன் சமூக சேவகருக்கு விருது

துபாயில் பஹ்ரைன் சமூக சேவகருக்கு விருது

ஆக 18, 2024


Google News
Latest Tamil News
துபாய் : துபாய் எம்.டி.எஸ்.மேலாண்மை நிறுவனம் மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய அறக்கட்டளையின் சார்பில் 78வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பஹ்ரைன் நாட்டின் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் அமைப்பின் நிறுவனர் சையத் ஹனீஃப்பிற்கு முனைவர் ஆ.முகமது முகைதீன் சமூகப்பணிகளுக்காக அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவித்தார்.



அப்போது பேசிய முனைவர் ஆ. முகம்மது முகைதீன், பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் அமைப்பின் நிறுவனர் சையத் ஹனீஃப், வருடத்தின் 365 நாட்களும் தொழிலாளர்களுக்கு தண்ணீர், ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை வழங்கி சேவையில் ஈடுபட்டுள்ளார். அவரை கௌரவிக்கும் வகையில் அப்துல் கலாம் விருது வழங்கப்படுகிறது என்றார்.



இந்த நிகழ்ச்சியில் முதுகுளத்தூர்.காம் ஆசிரியர் முதுவை ஹிதாயத், எம்.ஏ.கே. கர்டைன்ஸ் நிறுவனத்தின் நெல்லை ஏர்வாடி முஹைதீன் அப்துல் காதர், துபாய் தர்பார் யூடியூப் சேனலின் நிறுவனர் சொக்கம்பட்டி முஹம்மது கபீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



- நமது செய்தியாளர் காஹிலா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us