Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ஜெத்தாவில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஜெத்தாவில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஜெத்தாவில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஜெத்தாவில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா

ஜூன் 30, 2024


Google News
Latest Tamil News
ஜெத்தாவில் படித்து சிறப்புடன் தேர்ச்சி பெறும் தமிழ் மாணவ மாணவியர்களையும் அவர்கள் பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஜெத்தா தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்து வருகிறது.

அதுபோல, இந்த வருடமும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட மாணவ மாணவிகள் பெற்றோருடன் வந்து விருதினைப் பெற்றுச் சென்றனர்.



வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான முறையில் வரவேற்பு வழங்குவதற்கு பூங்கொத்துகளை மூர்த்தி ஏற்பாடு செய்ய, ராமானுஜம், செந்தில் ராஜா, சீனி அலி, பிரேம் மற்றும் அஹ்மத் பாஷா ஆகியோர் இன்முகத்துடன் அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தனர்.



ஜெத்தா தமிழ்ச் சங்க நிர்வாக உறுப்பினர் காஜா மொஹிதீன் வரவேற்புரை வழங்க சங்கத்தின் மூத்த உறுப்பினர் சிராஜ், ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சிறப்புகளையும் செயலாற்றும் தன்மைகளையும் விவரித்தார். ஜெத்தா தமிழ்ச்சங்கம் 25 வது வருடம் கொண்டாடும் இந்த வருடத்தில் இந்த சங்கம் தோன்றுவதற்கு காரணமாக இருந்த மறைந்த அப்துல் மாலிக்கின் பங்கினையும் தொலைநோக்குப் பார்வையையும் சிராஜ் நினைவு கூர்ந்தார்.



இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக, இந்திய பன்னாட்டு பள்ளி முதல்வர் ஃபராஹ் மசூத், அல் வரூத் பள்ளி முதல்வர் புவனேஸ்வரி சுப்பிரமணியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழ் ஆசிரியர்கள் பானு மற்றும் ஆயிஷா வாழ்த்துரை வழங்க, ஜெத்தா தமிழ்ச் சங்க உறுப்பினர் மருத்துவர் ஜெயஸ்ரீ மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து சிறப்பாக பேசினார்.



இந்தியன் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரத்தின் பிரதிநிதிகள் அப்துல் மஜீத், ஹலீம், தாஹா, ஹஜ் ஃபோரம் நசீர் வாவாகுஞ் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.



சிவா நன்றி வழங்க விழா இனிதே முடிவடைந்தது. ஜெய சங்கர் தொகுத்து வழங்க முரளி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.



- நமது செய்தியாளர் சிராஜ்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us