Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/ஆஸ்திரேலியா/செய்திகள்/பிரிஸ்பேன் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் வருடாந்தர பெருவிழா

பிரிஸ்பேன் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் வருடாந்தர பெருவிழா

பிரிஸ்பேன் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் வருடாந்தர பெருவிழா

பிரிஸ்பேன் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் வருடாந்தர பெருவிழா

ஏப் 13, 2024


Google News
Latest Tamil News
பிரிஸ்பேன் தெற்கு மக்லீனில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் 2024 வருடாந்தர பெருவிழா, பங்குனி 24 (6 ஏப்ரல் 2024) சனிக்கிழமையன்று, கொடியேற்றத்துடன் துவங்கியது.

சித்திரை 1, ஞாயிறன்று தேர் திருவிழா நடைபெற இருக்கிறது. சித்திரை 4 (17 ஏப்ரல் 2023) அன்று வைரவர் மடையுடன் விழா நிறைவு பெற இருக்கிறது. வழமை போல், பிரிஸ்பேன் மற்றும் புறநகர்ப் பகுதிவாழ் பக்தர்களின் பங்களிப்பு கருதி, நகரை 11 பகுதிகளாகத் தொகுத்து, ஒவ்வொரு நாள் திருவிழாவையும் ஒவ்வொரு பகுதி மக்களிடம் கொடுத்து, விழாவை சிறப்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் விசேட பூசைகளும், சிறப்பு அலங்காரங்களும், சுவாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது. தவிர, பல்வேறு இசை, நடனம் மற்றும் பலவித கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிகளுக்குப் பின் வந்திருக்கும் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன.

- நமது செய்தியாளர் ஆ சோ ரெங்கநாதன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us