/வாராவாரம்/சிந்திப்போமா/'மாயமாகும்' மக்கள்... நீலகிரிக்கு என்னதான் ஆச்சு!'மாயமாகும்' மக்கள்... நீலகிரிக்கு என்னதான் ஆச்சு!
'மாயமாகும்' மக்கள்... நீலகிரிக்கு என்னதான் ஆச்சு!
'மாயமாகும்' மக்கள்... நீலகிரிக்கு என்னதான் ஆச்சு!
'மாயமாகும்' மக்கள்... நீலகிரிக்கு என்னதான் ஆச்சு!

சி.ம.ஆனந்த பார்த்தீபன்
கட்டுரையாளர், கோவை கிருஷ்ணா பல்தொழில்நுட்ப கல்லூரி இயந்திரவியல் துறை பேராசிரியர், பேராசிரியர்களுக்கான, 'குருபிரம்மா' விருது, 'தங்கத்தமிழன்' விருது பெற்றவர். சிவோகா மனிதவள மேம்பாட்டு நிறுவன இயக்குனர்: தமிழர் பண்பாட்டு வாழ்வியல் பயிற்சியாளர். இதுவரை ஏழு தன்னம்பிக்கை புத்தகங்களை எழுதியவர். தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு, தமிழர் தொழில்நுட்பம், தமிழர் மரபு குறித்த பாடபுத்தகங்களை எழுதுபவர்.
இடம்பெயர்வு
அன்றிலிருந்து இன்று வரை, நீலகிரி மாவட்டத்தில் எண்ணற்ற காலப்பரிணாமங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 7.35 லட்சம் மக்கள் அதாவது, தமிழக மக்கள் தொகையில், ஒரு சதவீதம் மக்கள் இருந்தார்கள். அது, தற்போது கூடியிருக்கலாம் என்றாலும் கூட, சமீபகாலத்தில், நீலகிரியின் மக்கள் பிறந்த ஊரை விட்டு வேறிடத்துக்கு இடம்பெயர்வது அதிகரித்து விட்டது.
பொருளாதார பிரச்னை
பெரும்பாலான மக்கள், விவசாயத்தை மிக முக்கியமான தொழிலாக செய்கிறார்கள். அதிலும் அவர்கள் பயிரிடும் தேயிலை, வருடம் முழுவதுக்குமான பொருளாதாரத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி தருகிறது.


