/வாராவாரம்/சிந்தனைக் களம்/ இலங்கை தமிழர்களின் நம்பிக்கையை இழக்கும் கட்சிகள் இலங்கை தமிழர்களின் நம்பிக்கையை இழக்கும் கட்சிகள்
இலங்கை தமிழர்களின் நம்பிக்கையை இழக்கும் கட்சிகள்
இலங்கை தமிழர்களின் நம்பிக்கையை இழக்கும் கட்சிகள்
இலங்கை தமிழர்களின் நம்பிக்கையை இழக்கும் கட்சிகள்

மியூசிக்கல் சேர்
அண்மையில் நடந்து முடிந்த நாடு தழுவிய உள்ளாட்சித் தேர்தல்களில், தமிழர் பகுதிகளில் தமிழர் கட்சிகளும் கூட்டணிகளுமே முன்னணி வகித்துள்ளன. ஆனாலும் அவர்களில், எந்தவொரு அணியினராலும் எந்தவொரு உள்ளாட்சி சபையிலும் தனிப் பெரும்பான்மை பெற்று தலைமைப் பொறுப்பை ஏற்க முடியவில்லை.
ஜீரணிக்க முடியாது
தற்போதைய தமிழர் அரசியல், மூத்த வழக்கறிஞரான சுமந்திரனை சுற்றியே நகர்கிறது. ஆனாலும், அவருடைய கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு உள்ளது. மற்ற தமிழர் கட்சிகளுடன் எந்த ஒரு ஒருங்கிணைப்பும் இல்லை. தமிழர் அரசியல், 'சுமந்திரன் ஆதரவு அல்லது எதிர்ப்பு' என்ற பாதையில் நகர்கிறது. இத்தனைக்கும் கடந்த ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் தனது இடத்தை சுமந்திரனால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. என்றாலும், அவரை சுற்றியே தமிழ் அரசியல் நிகழ்கிறது என்பது பலராலும் ஜீரணிக்கப்பட முடியாத உண்மை.
நம்பிக்கை இழப்பு
இந்த பின்னணியில், தற்போது உள்ளாட்சி சபைகளில் தலைமை பொறுப்பை ஏற்பதில் ஆகட்டும், அதனை தொடர்ந்து நடக்கவிருக்கும் மாகாண சபை தேர்தலாக இருந்தாலும், தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே, அவர்களால் பதவிக்கு வரமுடியும்.