/வாராவாரம்/பொக்கிஷம்/உலகெங்கும் ஒளிவீசிய உன்னதத் திருநாள்

உலகெங்கும் ஒளிவீசிய உன்னதத் திருநாள்

உலகெங்கும் ஒளிவீசிய உன்னதத் திருநாள்

உலகெங்கும் ஒளிவீசிய உன்னதத் திருநாள்

உலகெங்கும் ஒளிவீசிய உன்னதத் திருநாள்

PUBLISHED ON : டிச 25, 2025 04:47 PM


Google News
Latest Tamil News
அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்தைப் பறைசாற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை, உலகம் முழுவதும் இன்று மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பனி படர்ந்த வீதிகள் முதல் பளபளக்கும் தேவாலயங்கள் வரை, எங்கும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்திருந்தது.Image 1513001விண்ணைத் தொடும் கொண்டாட்டங்கள் பண்டிகையின் முக்கிய ஈர்ப்பாக நகரங்களின் மையப்பகுதிகளில் பிரம்மாண்டமான 'கிறிஸ்துமஸ் மரங்கள்' வண்ண விளக்குகளால் உலகெங்கும் கோலாகலமாகத் தொடங்கிய கிறிஸ்துமஸ் வாடிகன் முதல் சென்னை வரை பக்திப் பெருக்குடன் கொண்டாட்டப்பட்டது. பனிப்பொழிவுக்கு நடுவே ஜொலிக்கும் இந்த மரங்களை மக்கள் வியப்புடன் கண்டு மகிழ்ந்தனர்.Image 1513002தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் விதமாக, தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. மெழுகுவர்த்தி ஒளியில் புனிதமான பாடல்களைப் பாடி, மக்கள் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொண்டனர். பல இடங்களில் இயேசுவின் பிறப்பைச் சித்தரிக்கும் 'புல்வெளித் தொட்டில்' காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன.Image 1513003மகிழ்ச்சியின் தூதுவர் சாண்டா கிளாஸ் குழந்தைகளின் மிகவும் விருப்பமான 'சாண்டா கிளாஸ்' பல இடங்களிலும் தோன்றி பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்கி மகிழ்வித்தார். சிவப்பு உடையும் வெண்ணிறத் தாடியுமாக வந்த சாண்டாவுடன் குழந்தைகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.Image 1513004வீடுகளில் வண்ண வண்ண நட்சத்திரங்கள் தொங்கவிடப்பட்டு, கேக் மற்றும் இனிப்புகள் பரிமாறப்பட்டன. பல நாடுகளில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், மக்கள் பொது இடங்களிலும் பூங்காக்களிலும் ஒன்று கூடி மாரத்தான் ஓட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.Image 1513005வாடிகனில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் நள்ளிரவுத் திருப்பலியை திருத்தந்தை 14-ம் லியோ நடத்தினார்.புனித பீட்டர் பேராலயத்தில் குழந்தை இயேசுவின் சிலையினை திருத்தந்தை கையில் ஏந்தினார்.ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் உள்ள ரோமர்பெர்க் சதுக்கத்தில் கிறிஸ்துமஸ் மணி ஓசையைக் கேட்க பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.Image 1513006நாக்பூர் புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் கதீட்ரலில் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று குழந்தை இயேசுவின் சிலையினைப் புல்வெளிக் குடிலில் பேராயர் வைத்தார்.கர்நாடகாவின் சிக்கமகளூருவில் குழந்தை இயேசுவின் சிலையினை பக்தர்கள் முத்தமிட்டு மகிழ்ந்தனர்.சென்னை சாந்தோம் கதீட்ரல் தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் திரளானவர்கள் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதாபிமானத்தை வலியுறுத்தும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை, மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் விதைத்துள்ளது. இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் இந்தத் திருநாள், உலகிற்கு அமைதியின் செய்தியை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.

-எல்.முருகராஜ்