Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நிஜக்கதை/பணமும் பாவமும் தரும் அலிகேட்டர்கள்

பணமும் பாவமும் தரும் அலிகேட்டர்கள்

பணமும் பாவமும் தரும் அலிகேட்டர்கள்


PUBLISHED ON : மார் 13, 2026 10:12 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2026 10:12 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கையின் ஆச்சரியமான படைப்புகளில் ஒன்றான அலிகேட்டர்கள், டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே பூமியில் இருப்பவை. இவை முதலைகளின் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் தோற்றம், குணம் மற்றும் மனிதப் பயன்பாடு எனப் பலவற்றில் தனித்துவமானவை.Image 1548462அலிகேட்டர்களை முதலைகளிடமிருந்து பிரித்தறிய சில முக்கியக் காரணிகள் உள்ளன. அலிகேட்டர்கள் ஆங்கில எழுத்தான 'U' வடிவில் அகலமான மூக்கைக் கொண்டவை; முதலைகள் 'V' வடிவ மூக்கைக் கொண்டவை. அலிகேட்டர்கள் வாயை மூடியிருக்கும்போது அவற்றின் கீழ்த்தாடைப் பற்கள் வெளியே தெரியாது. இவை பெரும்பாலும் நன்னீர் நிலைகளான ஏரிகள், குளங்கள் மற்றும் சதுப்பு நிலங்களிலேயே வாழ்கின்றன.Image 1548463அலிகேட்டர்கள் வியக்கத்தக்க நீண்ட ஆயுளைக் கொண்டவை. காடுகளில் இவை 35 முதல் 50 ஆண்டுகள் வரை வாழும். பாதுகாக்கப்பட்ட இடங்களில் 80 ஆண்டுகளைக் கூட இவை கடக்கின்றன. இருப்பினும், இவை வெறும் 2 அல்லது 3 வயதிலேயே மனிதத் தேவைகளுக்காகப் பலியிடப்படுவது ஒரு கசப்பான உண்மை.Image 1548464அமெரிக்காவின் லூசியானா போன்ற பகுதிகளில் அலிகேட்டர் வளர்ப்பு ஒரு பெரிய தொழிலாக உள்ளது. காடுகளில் அழிய வாய்ப்புள்ள முட்டைகளைச் சேகரித்துப் பண்ணைகளில் பாதுகாப்பாகப் பொரிக்க வைக்கிறார்கள். பண்ணைகளில் சீரான வெப்பநிலையும் உணவும் வழங்கப்படுவதால், ஓராண்டிலேயே இவை சுமார் 4 அடி நீளம் வளர்ந்துவிடுகின்றன.

ஒரு அலிகேட்டர் 35 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்றாலும், அதன் தோல் மிகவும் மென்மையாகவும் தழும்புகள் இல்லாமலும் இருப்பது அதன் இளம் வயதில்தான். 2 வயதிற்கு மேல் வளர்ந்தால் தோல் கடினமாகிவிடும் என்பதால், அந்த வயதிலேயே அவை 'அறுவடை' செய்யப்படுகின்றன.

ஆடம்பரப் பொருட்கள் தயாரிப்பில் அலிகேட்டர் தோல் 'தங்கம்' போன்றது. இதில் செய்யப்படும் பர்ஸ்கள், பைகள், பெல்ட்டுகள் உள்ளிட்ட பொருட்களுக்கு உலக சந்தையில் விலை மிக அதிகம். இதன் வயிற்றுப் பகுதி தோலில் கால்சியம் குறைவாக இருப்பதால், அது மிகவும் மென்மையாகவும் வளைந்துகொடுக்கும் தன்மையுடனும் இருக்கும். இதன் தோலில் உள்ள செதில்கள் சீரான சதுர வடிவில் இருப்பதால், பைகள் மற்றும் கைக்கடிகாரப் பட்டைகள் தயாரிக்க இதுவே முதல் தேர்வாகிறது.

அமெரிக்காவில் இது ஒரு வணிகத் தொழில். ஆனால், இந்தியாவில் முதலைகளைக் கொல்வது அல்லது அவற்றின் தோலை விற்பது சட்டப்படி கடும் குற்றமாகும். சென்னையில் உள்ள 'முதலைப் பண்ணை' போன்ற இடங்கள் முதலைகளைப் பாதுகாக்கவும், இனம் அழியாமல் காக்கவும் மட்டுமே செயல்படுகின்றன. இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி, முதலைத் தோல் பொருட்களை வைத்திருப்பது தண்டனைக்குரியது.

விலங்கு வதை மற்றும் ஆடம்பர மோகம் ஒரு உயிரின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது. ஆடம்பரத்திற்காக ஓர் உயிரை அதன் இளமைக்காலத்திலேயே பலி கொடுப்பது தார்மீக ரீதியாகப் பலரால் விமர்சிக்கப்படுகிறது. எனினும், பண்ணை வளர்ப்பு முறையால்தான் காடுகளில் உள்ள அலிகேட்டர்கள் வேட்டையாடப்படுவது குறைந்து, அவற்றின் இனம் அழியாமல் காக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அலிகேட்டர்கள் இயற்கையின் சமநிலையைப் பேணும் முக்கியக் கண்ணி. அவற்றின் தோலுக்காகக் கொல்லப்படுவதைத் தார்மீக ரீதியாக நாம் ஏற்க முடியாவிட்டாலும், சர்வதேச அளவில் இது ஒரு சிக்கலான பொருளாதாரச் சங்கிலியாக உள்ளது. 'அழகுக்காக ஓர் உயிர் அழிய வேண்டாம்' என்ற விழிப்புணர்வு பெருகி வருவதால், வரும் காலங்களில் செயற்கைத் தோல்களின் பயன்பாடு அதிகரித்து, இந்தப் பரிதாப உயிரினங்கள் முழு ஆயுட்காலத்தையும் சுதந்திரமாக வாழ வழி பிறக்கும் என நம்புவோமாக.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us