ADDED : ஆக 22, 2010 08:48 PM
கோவை : மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் களவிளம்பர அலுவலகம் சார்பில், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் ராஜிவ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மாணவ, மாணவியர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். ராஜிவ் குறித்த கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. பள்ளி விலங்கியல் துறை ஆசிரியர் சோமு வரவேற்றார். தமிழாசிரியர் தர்மலிங்கம் மற்றும் கள விளம்பர உதவி அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப் பட்டது. ஆங்கில ஆசிரியர் சிவன்ராஜ் நன்றி கூறினார்.