/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ கட்சி பதவிக்கு கேட்குறாங்க 'லட்சம்'; அதிகாரிங்க வாங்கி தள்றாங்க 'லஞ்சம்' கட்சி பதவிக்கு கேட்குறாங்க 'லட்சம்'; அதிகாரிங்க வாங்கி தள்றாங்க 'லஞ்சம்'
கட்சி பதவிக்கு கேட்குறாங்க 'லட்சம்'; அதிகாரிங்க வாங்கி தள்றாங்க 'லஞ்சம்'
கட்சி பதவிக்கு கேட்குறாங்க 'லட்சம்'; அதிகாரிங்க வாங்கி தள்றாங்க 'லஞ்சம்'
கட்சி பதவிக்கு கேட்குறாங்க 'லட்சம்'; அதிகாரிங்க வாங்கி தள்றாங்க 'லஞ்சம்'

கோஷ்டி பூசல் தீரலே...
''மித்து, எதிர்கட்சியில நடக்கிற கோஷ்டி பூசலை சொல்றேன் கேளு. முருங்கப்பாளையம் ஏரியாவில, வளையங்காட்டில் திண்ணை பிரசாரம் நடந்துச்சு. அங்கதான், கட்சியோட அமைப்பு செயலாளர் வீடு இருக்கு. ஆனா, அவருக்கு அழைப்பு விடுக்கலையாம். அவரோட ஆதரவாளரா இருக்கும் நிர்வாகிகளுக்கும் சொல்லவே இல்லையாம். இதனால, பிரசார நிகழ்ச்சியை, கட்சிக்காரங்களே புறக்கணிச்சுட்டாங்களாம். தேர்தலுக்கு முன்னாடியே இப்படி கோஷ்டிகானம் பாடினா, இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ தெரியல,''
கேபில் ஆபீசருக்கு 'கவனிப்பு'
''அரசு கேபிள் டிவியில நடந்த கூத்து தெரியுமா?''
ஆட்டோ ஸ்டாண்ட் 'அட்ராசிட்டி'
''வேற பெரிய பிரச்னை வந்ததான், அதிகாரிங்க கவனிப்பாங்க போல. மித்து, ரயில்வே ஸ்டேஷன் முன்னாடி உள்ள இடத்தில ஒரு கப்பிள் டூவீலர் நிறுத்தினாங்க. உடனே அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள், 'ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்துல டூவீலர் நிறுத்தாதீங்க. ஆட்டோ நிறுத்த டெண்டர் எடுத்து, பணம் கட்டிருக்கோம்'னு சத்தம் போட்டுள்ளனர். ஒரு நிமிஷத்துல போயிருவோம். அதுக்கு ஏனிப்படி பேசுறீங்க,' கேட்க, டூவீலரில் வந்த லேடி, 'ஆட்டோக்களை இவ்வளவு துாரம் நிறுத்திவீங்களா. உங்களுக்கு பட்டா போட்டு கொடுத்துட்டாங்களான்னு சண்டை போட்டுள்ளனர். இதப்பார்த்த பக்கத்துல இருந்த போலீஸ் ஒருத்தர், ரெண்டு தரப்பையும் சமாதானம் செஞ்சு அனுப்புனாராம்,'' சித்ரா விளக்கினாள்.
'காசில்லாத' கட்சிகள்?
''உண்மை தான் மித்து. கோர்ட் உத்தரவுப்படி கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டது. ஆனா, திருப்பூர்ல கோர்ட் உத்தரவை இம்மியளவு கூட கட்சியினர் மதிக்கல. ஆனா, கோர்ட் அவமதிப்புக்கு அஞ்சி, ஆபீசர்ஸ், களமிறங்கி, கம்பங்களை அகற்றிட்டு வர்றாங்க. இத தெரிஞ்சிட்டு, கட்சிக்காரங்க உடனே போய் கம்பத்தை எடுத்துட்டு போயிடறாங்களாம். கம்பத்தை எடுக்கறதுக்கு கூட செலவு செய்யாதவங்களுக்கு கட்சி எதுக்கு நடத்துறாங்கன்னு அதிகாரிகள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக தங்களோட ஆதங்கத்தை புலம்பி வருகின்றனராம்,'' சீரியசாக சொன்னாள் சித்ரா.