ஆங்கிலேய படையை எதிர்த்து கோட்டையை பாதுகாத்த 'கோம்பை'.. நம்மூரு ஹீரோவின் வரலாறு
ஆங்கிலேய படையை எதிர்த்து கோட்டையை பாதுகாத்த 'கோம்பை'.. நம்மூரு ஹீரோவின் வரலாறு
ஆங்கிலேய படையை எதிர்த்து கோட்டையை பாதுகாத்த 'கோம்பை'.. நம்மூரு ஹீரோவின் வரலாறு

பூர்வீகம்
தேனி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோம்பை, உத்தமபாளையம், பண்ணைபுரம், தேவாரம், பெரியகுளம், போடி நாயக்கனுார், கம்பம் மற்றும் கூடலுார் உள்ளிட்ட பகுதிகள், கோம்பை நாய் இனத்தின் பூர்வீக இனப்பெருக்க வழிதடங்களாக உள்ளன. தற்போது, கோம்பை தென் மாநிலம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.
எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்
கோம்பை நாய், மிக துணிச்சலான, ஆற்றலான, பாதுகாவல் திறன் கொண்டது. இதை பப்பியாக இருக்கும் போதே எடுத்து வளர்த்தால், உரிமையாளர், குடும்பத்தில் உள்ளோரிடம், விசுவாசமாக நடந்து கொள்ளும். தன் எல்லையை தானே வரையறுத்து கொண்டு வாழும் திறன் கொண்டது. இதன் எஜமானரை யாராலும் நெருங்க முடியாத அளவுக்கு,பாதுகாப்பு கவசமாக துணை நிற்பதால், 'ஒரு மனிதருக்கான நாய்' (Human's dog) என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறது.
எப்படி பாதுகாக்கலாம்
உலக நாடுகள் பலவும், உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில், வெளிநாட்டு நாய் இனங்களை பலரும் விரும்பி வளர்ப்பதால், உள்நாட்டு நாய் இனங்களின் தேவை, பயன்பாடு குறைந்துவிட்டது.