டாக்டர்‛ஸ் கார்னர்: பூனைக்கு மணி கட்டலாமா! கால்நடை மருத்துவர் 'தீபன்ஷிகா'
டாக்டர்‛ஸ் கார்னர்: பூனைக்கு மணி கட்டலாமா! கால்நடை மருத்துவர் 'தீபன்ஷிகா'
டாக்டர்‛ஸ் கார்னர்: பூனைக்கு மணி கட்டலாமா! கால்நடை மருத்துவர் 'தீபன்ஷிகா'

தடுப்பூசி போடுவதால்
பூனை பிறந்து 2 மாதத்தில், 'சி.ஆர்.பி.,' தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். இதை 21 நாட்கள் இடைவெளியில், மூன்று 'டோஸ்' போடுவது அவசியம். ரேபிஸ் தடுப்பூசி பிறந்து, 3 வது மாதத்தில் போடுவது அவசியம். இதோடு, ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். இதன்மூலம், உங்கள் பூனை மனிதர்களை தாக்கினாலோ, வேறு பூனைகளின் தாக்குதலுக்கு உட்பட்டாலோ, எவ்வித ஆபத்தும் ஏற்படாது.
ஆரோக்கியமான சந்ததி
பூனையை வெறும் செல்லப்பிராணியாக மட்டுமே வைத்து கொள்ள நினைப்போர், ஆறு மாதத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிடலாம். பிரீடிங் செய்ய முடிவெடுத்தால், பூனைகளை வெளிச்சத்தில் வைத்தால் தான், அதன் இனப்பெருக்க ஹார்மோன் சுரக்கும். கருவுற தயாராக இருக்கும் பூனை, இரவு நேரத்தில் துாங்காமல் சத்தமாக அழும். இடுப்பு பகுதி துாக்கியபடி நடக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், ஆண் பூனையுடன் வீட்டிற்குள் வைத்திருப்பது அவசியம்.
பூனைக்கு மணிகட்டினால்
பிற செல்லப்பிராணிகளை காட்டிலும் பூனையின் சைக்காலஜி வித்தியாசமானது. வீட்டிற்கு புதிய ஆட்கள் வரும்பட்சத்தில், இதை துாக்குவது, கொஞ்சுவது கூடாது. இதை திட்டினாலோ, அடித்தாலோ மறைவான இடத்தில் ஒளிந்து கொள்ளும். இச்சமயத்தில் தொந்தரவு செய்யாமல் இருந்தால் தான், பழைய மனநிலைக்கு திரும்பும்.