Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/முதல்வரே... ஒரு நிமிஷம்

முதல்வரே... ஒரு நிமிஷம்

முதல்வரே... ஒரு நிமிஷம்


PUBLISHED ON : ஜூலை 06, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 06, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செய்தி: கொள்ளை போன நகை; தவிக்கும் சிவகங்கை குடும்பம்!

அநீதி: 'கண்டறிய இயலவில்லை' - தமிழக காவல்துறை; 'இது ஏற்புடையதல்ல' - ஆறு ஆண்டுகளாகப் போராடும் பெண்!

அரசே... சிவகங்கை மாவட்டத்தில் உமது காவல் துறை மேற்கொண்ட சமீபத்திய ஆக்ரோஷத்திற்கு முற்றிலும் நேர்மாறானது எனது வழக்கு! கண்ணமங்கலபட்டி கிராமவாசியான நான் அகிலாண்டம்; சத்துணவு ஊழியர்.

செப்டம்பர் 9, 2019; பூட்டியிருந்த என் வீட்டில் பட்டப்பகலில் 28 பவுன் தங்க நகை, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது. வெளிநாட்டில் கூலியாக என் கணவர் சம்பாதித்து சேர்த்தவை அவை!

சிங்கம்புணரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. மூன்றே மாதம்... 'எந்த துப்பும் கிடைக்கவில்லை' என்று காவல் துறை கைவிரிக்க, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தேன். 'மூன்று மாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தேன்.

'உள்துறை செயலர் உரிய முடிவெடுக்க வேண்டும்' என, 2023 ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜனவரி 21ம் தேதி, 'துப்பு கிடைத்தால் புலன் விசாரணை செய்யப்படும்' என்று உங்கள் அரசு பதில் நீட்டி விட்டது. 'ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக தமிழக காவல்துறை செயல்படுகிறது' என தாங்கள் பெருமை பேசிக் கொள்வது எந்த அடிப்படையில் அரசே?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us