Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் துவங்கியது மீன்பிடி தொழில்

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் துவங்கியது மீன்பிடி தொழில்

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் துவங்கியது மீன்பிடி தொழில்

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் துவங்கியது மீன்பிடி தொழில்

ADDED : செப் 06, 2011 11:43 PM


Google News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு வாரத்திற்குப்பின், நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

பாக் ஜலசந்தி கடல், தொடர்ந்து பலத்த காற்றுடன் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால், ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஒரு வாரமாக மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று அதிகாலை காற்றின் வேகம் தணிந்தது. நேற்று முதல் கடலுக்கு செல்ல மீன்துறை அலுவலகம் அனுமதி அளித்தது. ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகளிடம் அனுமதி டோக்கன் பெற்ற மீனவர்கள் 400 க்கும் அதிகமான படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். இதனால், ராமேஸ்வரம், பாம்பன் கடற்கரைகள் நேற்று 'பிசி'யாக காணப்பட்டன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us