/உள்ளூர் செய்திகள்/கடலூர்/போலீசுக்கு தகவல் கொடுப்பதாக சந்தேகம்: கூழ் வியாபாரி கொலையில் 4 பேர் கைதுபோலீசுக்கு தகவல் கொடுப்பதாக சந்தேகம்: கூழ் வியாபாரி கொலையில் 4 பேர் கைது
போலீசுக்கு தகவல் கொடுப்பதாக சந்தேகம்: கூழ் வியாபாரி கொலையில் 4 பேர் கைது
போலீசுக்கு தகவல் கொடுப்பதாக சந்தேகம்: கூழ் வியாபாரி கொலையில் 4 பேர் கைது
போலீசுக்கு தகவல் கொடுப்பதாக சந்தேகம்: கூழ் வியாபாரி கொலையில் 4 பேர் கைது
விருத்தாசலம் : போலீசுக்கு தகவல் கொடுப்பதாக எழுந்த சந்தேகத்தால் விருத்தாசலம் கூழ் வியாபாரியை கொலை செய்ததாக கைதானவர்கள் போலீஸ் விசாரணையில் கூறினர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையைச் சேர்ந்தவர் கூழ்மணி (எ) சின்னதுரை, 40.
அதனால் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி இரவு சின்னதுரையை குடிப்பதற்காக மணிமுக்தா ஆற்றிற்கு அழைத்துச் சென்று ஐந்து பேரும் குடித்தோம்.போதை ஏறிய பின் சின்னதுரையின் கழுத்தை நெறித்தோம். சாகாததால் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றோம். அவர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி உடலை அருகிலே குழி தோண்டி புதைத்தோம். துணிகளை அருகில் காட்டுப் பகுதியில் தீவைத்து எரித்தோம் என ஒப்புக் கொண்டனர்.அதனையடுத்து நான்கு பேரும் மணிமுக்தா ஆற்றில் சின்னதுரையை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். டி.எஸ்.பி., அறிவழகன், தாசில்தார் சரவணன், இன்ஸ்பெக்டர் சீராளன் முன்னிலையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. பிணம் புதைக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலானதால் வெறும் எலும்பு கூடுகள் மட்டுமே இருந்தன.இந்த கொலை வழக்கு தொடர்பாக சண்முகம், ரவி, அசோக்குமார், கருமணி ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார், கொலைக்கு மூளையாக இருந்த கடலூர், சாமிப்பிள்ளை நகரைச் சேர்ந்த பாருக்கான், 32; ராஜசேகர், 23; ஆகியோரை தேடி வருகின்றனர்.