Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குறுவட்ட தடகள போட்டி நெய்வேலியில் துவங்கியது

குறுவட்ட தடகள போட்டி நெய்வேலியில் துவங்கியது

குறுவட்ட தடகள போட்டி நெய்வேலியில் துவங்கியது

குறுவட்ட தடகள போட்டி நெய்வேலியில் துவங்கியது

ADDED : ஆக 26, 2011 12:09 AM


Google News

நெய்வேலி : குறிஞ்சிப்பாடி குறுவட்ட தடகளப் போட்டிகள் நெய்வேலி பாரதி விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.

துவக்க விழாவிற்கு நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஜவகர் கல்விக் கழகத்தின் செயலர் ஜார்ஜ் ஜேக்கப், என்.எல்.சி., பொது மேலாளர் சின்னப்பன், நெய்வேலி விளையாட்டுக் கழக முதன்மை மேலாளர் நாராயணன், கடலூர் கல்வி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாமிதுரை முன்னிலை வகித்தனர். ஜவகர் பள்ளி ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார்.

நெய்வேலி டி.எஸ். பி., மணி போட்டிகளை தொடங்கி வைத்தார். நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடத்தப்பட்டு வரும் இப்போட்டிகள் வரும் 30ம் தேதி முடிவகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us