Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கார், டூவீலர்கள் எரிப்பு : சாயல்குடி அருகே பதட்டம்

கார், டூவீலர்கள் எரிப்பு : சாயல்குடி அருகே பதட்டம்

கார், டூவீலர்கள் எரிப்பு : சாயல்குடி அருகே பதட்டம்

கார், டூவீலர்கள் எரிப்பு : சாயல்குடி அருகே பதட்டம்

ADDED : செப் 20, 2011 11:43 PM


Google News
Latest Tamil News
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசி கார், டூவீலர்கள் எரிக்கப்பட்டன.

இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. கீழச்செல்வனூரைச் சேர்ந்தவர் வி.குமரையா. மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைத்தலைவர். இவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு 1.45 மணிக்கு 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. வாட்சுமேன் பாண்டியை போர்வையால் கட்டிப்போட்டனர். அங்கிருந்த கார், டூவீலர்களை பெட்ரோல் குண்டு வீசி எரித்தனர். குமரையா போலீசில் புகார் கொடுத்தார். உள்ளாட்சி தேர்தல் பிரச்னையாகவோ, பரமக்குடி கலவரத்தின் எதிரொலியாகவோ இருக்கலாம் என்ற கோணத்தில் கடலாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us