ADDED : ஜூலை 25, 2011 01:55 AM
அன்னூர் : அன்னூரில் லாரி திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.ஆயிமாபுதூரை சேர்ந்தவர் முத்துச்சாமி (44).
இவருக்கு சொந்தமான லாரியை அன்னூர் கோவை ரோட்டில் யூனியன் ஆபீஸ் முன் நிறுத்தியிருந்தார். நேற்று முன் தினம் காலையில் பார்த்தபோது லாரியை காணவில்லை. யாரோ திருடிச் சென்று விட்டனர். அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.