Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அரசு பஸ் மோதிபள்ளி மாணவர் பலி

அரசு பஸ் மோதிபள்ளி மாணவர் பலி

அரசு பஸ் மோதிபள்ளி மாணவர் பலி

அரசு பஸ் மோதிபள்ளி மாணவர் பலி

ADDED : ஆக 19, 2011 03:08 AM


Google News
கடலூர்:அரசு பஸ் மோதி சைக்கிளில் சென்ற பிளஸ் 1 மாணவர் இறந்தார்.வடலூர் அடுத்த பார்வதிபுரம் சர்வோதையா நகரைச் சேர்ந்தவர்கள் புரு÷ஷாத்தமன் மகன் முத்துக்கிருஷ்ணன், 17; சங்கர் மகன் கணேஷ்பாபு, 17; இருவரும் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தனர்.இருவரும் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து டியூஷன் சென்று சைக்கிளில் வீடு திரும்பினர்.

கணேஷ்பாபு சைக்கிளை ஓட்டி வந்தார்.வடலூர்-நெய்வேலி மெயின்ரோட்டில் சேலத்தில் இருந்து சிதம்பரம் வந்த அரசு பஸ் (டிஎன் 32 என் 3411) சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கணேஷ்பாபு, முத்துக்கிருஷ்ணன் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். வழியில் முத்துக்கிருஷ்ணன் இறந்தார். கணேஷ்பாபு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.வடலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us