/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் மாநகராட்சி 58வது வார்டுக்கு பொது வேட்பாளராக கறிக்கடை பழனிசேலம் மாநகராட்சி 58வது வார்டுக்கு பொது வேட்பாளராக கறிக்கடை பழனி
சேலம் மாநகராட்சி 58வது வார்டுக்கு பொது வேட்பாளராக கறிக்கடை பழனி
சேலம் மாநகராட்சி 58வது வார்டுக்கு பொது வேட்பாளராக கறிக்கடை பழனி
சேலம் மாநகராட்சி 58வது வார்டுக்கு பொது வேட்பாளராக கறிக்கடை பழனி
சேலம்: உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாநகராட்சி 58வது வார்டுக்கு, ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து, பொது வேட்பாளராக கறிக்கடை பழனியை தேர்வு செய்தனர்.
தொடர்ந்து கறிக்கடை பழனி பேசியதாவது: எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் இருந்தே நண்பர்களுடன் சேர்ந்து, தேர்தலின் போது, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டுத்தான் பழக்கம். இப்பொழுது கூட, நான் மேயர் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திற்கும், எனக்கு தேர்தல் அதிகாரி அறிவிக்கும் சின்னத்திற்கும்தான் ஓட்டு கேட்க உள்ளேன். உங்களுடைய பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றால், இந்த வார்டு புதியதாக மாநகராட்சியில் சேர்ந்துள்ளதால், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர பாடுபடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், அ.தி.மு.க., துணை செயலாளர் கோவிந்தசாமி, பிரதிநிதி முருகன், கோகிலா, பேரவை இணை செயலாளர் மணி, வட்ட பொருளாளர் நைனா சந்திரன், இளைஞர் அணி செயலாளர் சங்கர், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சுப்ரமணி, முன்னாள் அவைத் தலைவர் செல்வம், சவுந்தரராஜன், மகளிரணி செயலாளர் செல்வி, மற்றும் பழனிவேல், கோபால், மணிகண்டன், சரவணன், நடேசன், பழனிசாமி, கோவிந்தசாமி, கார்பெண்டர் சுரேஷ், சந்திரன் உட்பட, இளைஞர், இளம்பெண்கள் பாசறையினர், அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும், 29ம் தேதி காலை 10 மணிக்கு, செல்லக்குட்டிகாடு முனியப்பன் கோவில் அருகில் இருந்து புறப்பட்டு, தாதகாப்பட்டி கேட்டில் உள்ள மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது.