Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பாதாள சாக்கடை திட்டத்திற்கு பின் ரோடுகளை சீரமைக்க ரூ.3.30 கோடி

பாதாள சாக்கடை திட்டத்திற்கு பின் ரோடுகளை சீரமைக்க ரூ.3.30 கோடி

பாதாள சாக்கடை திட்டத்திற்கு பின் ரோடுகளை சீரமைக்க ரூ.3.30 கோடி

பாதாள சாக்கடை திட்டத்திற்கு பின் ரோடுகளை சீரமைக்க ரூ.3.30 கோடி

ADDED : செப் 20, 2011 10:21 PM


Google News
தேனி:தேனி அல்லிநகரம் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதால் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க 3.30 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கிறது. சேதமடைந்த ரோடுகளை, சாலை உட்கட்டமைப்பு நவீனப்படுத்தல் திட்டத்தில் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான மதிப்பீட்டை தயாரித்து அனுப்புமாறு மதுரை, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சாலைகள் சீரமைப்பிற்காக, அரசு மானியம் 3 கோடி ரூபாய், நகராட்சி பங்குத்தொகை 30 லட்சம் ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியில் நகராட்சி பகுதியில் உள்ள 67 ரோடுகள் அமைக்கப்பட உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us