வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்
வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்
வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசம்
ADDED : செப் 09, 2011 08:34 AM
வால்பாறை: வால்பாறை அருகே காட்டுயானைகள் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்ததில், அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்களை விரட்டியடித்தது.
வால்பாறை அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் கள்ளார் தேயிலை தோட்டத்திற்குள் 7 காட்டுயானைகள் புகுந்தன. அங்கு தோட்டத்தில் மருந்து தெளித்துக்கொண்டிருந்தவர்களை விரட்டியது. இதில் லாரி டிரைவர் துரைராஜ் (38) என்பவரை தாக்கியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.