/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்
விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்
விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்
விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ்
ADDED : செப் 20, 2011 12:03 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, 20 நாட்களுக்குப்பின் நேற்று அவர்கள் கடலுக்குச் சென்றனர்.
திடீரென வேலைநிறுத்தம் செய்ததால், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு உரிமையாளர்களுக்கும், மீனவ தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த 20 நாட்களாக அப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, கலெக்டர் ஆஷிஷ்குமார், அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேசினர். இதையடுத்து, வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற மீனவர்கள் சம்மதித்தனர். நேற்று முதல் அவர்கள் விசைப்படகுகளில் வழக்கம்போல் கடலுக்குச் சென்றனர்.


