
'பயங்கரவாதம் குறையலையே...!'
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்தார்.
'அருவான்னா மதுரையா...?'
மதுரையில் தொல்லியல் கழகம் சார்பில் நடந்த கருத்தரங்கில், பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசினார். அவர் பேசும்போது, 'சினிமாக்களில் அரிவாளை எடுத்துக் கொண்டு ஓடும் காட்சி இருந்தால், அது மதுரை என்ற அளவுக்கு நம்மூரை காட்டுகின்றனர். ஒருமுறை சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறச் சென்றபோது, ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு சென்றோம். நான் தற்செயலாக பின்னால் கையை கொண்டு சென்றதை பார்த்து, ஏதோ அரிவாளை எடுக்கப் போகிறேன் என்று நினைத்து, 'மன்னிச்சிடுங்க...' என்றார். இப்படி இருந்தால் எப்படி சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வருவர்' என்றார்.இதைக் கேட்ட சென்னை பார்வையாளர் ஒருவர், 'எல்லாம் மதுரையிலிருந்து வந்து, சினிமா எடுக்கறவங்க செய்ற வேல... அவங்களப் பாத்து இவர் பேச வேண்டியது தானே...' எனச் சொல்லி, 'உச்' கொட்டினார்.