ADDED : ஜூலை 13, 2011 11:51 PM
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அடுத்த ஸ்ரீ பெண்ணேஸ்வரர் மடம்
ஸ்ரீவேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவல பூஜை இன்று
(ஜூலை14) நடக்கிறது.
இதையொட்டி, இன்று மாலையில் ஸ்வாமிக்கு சிறப்பு
அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம்
வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன்குமார்
மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர். * காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள்
சமேத அருணேஸ்வரர் கோவிலில் பவுர்மணியை முன்னிட்டு இன்று மாலை ஸ்வாமிக்கு
சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 5 மணிக்கு பக்தர்கள்
பங்கேற்று கிரிவலம் வருகின்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர்
சீனிவாசன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். * தர்மபுரி
கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் ஸ்ரீ
மகாலிங்கேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில் ஆகியவற்றில்
பவுர்ணமி கிரிவல சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


