ADDED : செப் 15, 2011 03:38 AM
சங்கராபுரம்:இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.சங்கராபுரம் அடுத்த
புதுப்பேட்டையை சேர்ந்த கண்ணன் மகள் பூங்கொடி,35.
இவருக்கும் ஜம்பையை
சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்
திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.சுந்தரமூர்த்தி வெளிநாட்டில் வேலை செய்து
வருகிறார். நேற்று முன் தினம் பூங்கொடி புதுப்பேட் டைக்கு வந்துள்ளார்.
அப்போது அவரது அக்கா மலர் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பூங்கொடி
தனது உடலில் மண்ணெண் ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயமடைந்த
பூங்கொடியை நேற்று காலை மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு
செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். வடபொன்பரப்பி போலீசார் வழக்கு
பதிந்தனர்.


