ADDED : செப் 08, 2011 11:19 PM
கூடலூர் : ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கூடலூர் புனித தாமஸ் பள்ளியில்
மாணவர்களுக்கான பூக்கோல போட்டி நடந்தது.
இதில், தலைமை ஆசிரியர் ராஜன்
வர்கீஸ் முன்னிலை வகித்தார். தேர்வு செய்யப்பட்ட பூக்கோல குழுவினருக்கு
பாரராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவேலி மன்னன் பற்றிய நாடகம்
நடந்தது. நிகழ்ச்சியில் செயலாளர் தாமஸ், பொருளாளர் ஜான் சக்கிரியா உட்பட
பலர் கலந்து கொண்டனர். இதில், ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வத்துடன்
பங்கேற்றனர்.