ADDED : ஆக 30, 2011 02:02 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் கல்வி மாவட்ட சாரணர் இயக்கம் சார்பில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி திருமலைக்கேணியில் நடந்தது.முதன்மைக்கல்வி அலுவலர் அசோகன் துவக்கி வைத்தார்.
மாவட்டக்கல்வி அலுவலர் காதர்சுல்தான் முன்னிலை வகித்தார். சாரணர் சங்க மாவட்ட செயலாளர் அந்தோணிபீட்டர் வரவேற்றார். மாவட்ட சாரண ஆணையர் ரத்தினபாண்டியன் பேசினார்.சென்னை முத்துக்கிருஷ்ணன் பயிற்சி அளித்தார்.


