/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்டத்தில் 133 பயனாளிகளுக்கு இலவச மாடு, ஆடுகள்தூத்துக்குடி மாவட்டத்தில் 133 பயனாளிகளுக்கு இலவச மாடு, ஆடுகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 133 பயனாளிகளுக்கு இலவச மாடு, ஆடுகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 133 பயனாளிகளுக்கு இலவச மாடு, ஆடுகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 133 பயனாளிகளுக்கு இலவச மாடு, ஆடுகள்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 133 பயனாளிகளுக்கு தமிழக அரசு இலவச கறவை மாடுகள், ஆடுகள் வழங்குகிறது.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது; தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டில் அரிசி வாங்கும் கார்டுகளுக்கு இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன் வழங்கப்படுகிறது. இம் மாவட்டத்திற்கு முதல் கட்டமாக எவ்வளவு பேருக்கு வழங்கப்பட உள்ளது என்கிற விபரம் இன்னும் அரசிடம் இருந்து வரவில்லை. இருப்பினும் தற்போது ரேஷன் கடைகளில் அரிசி வாங்குவோர் பட்டியல் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி தமிழக முதல்வரால் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக ஆடு, மாடு வழங்கும் திட்டம் துவக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த பயனாளிகள் பட்டியல் கிராமசபையில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தமட்டில் கறவை பசுமாடுகள் ஓட்டப்பிடாரம் யூனியன் சங்கம்பட்டி கிராமத்தில் 47 பயனாளிகளும், விளாத்திகுளம் யூனியன் இனாம் சுப்பிரமணியபுரத்தில் 26 பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசால் நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு மூலம் இந்த தேர்வு நடந்துள்ளது. இந்த பயனாளிகளுக்கு அவர்கள் விரும்பும் வகையில் இலவச மாடு வாங்கி கொடுப்பதற்கு ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு மாடு வாங்குவதற்கான பணிகளை கால்நடைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் செப்டம்பர் 15ம் தேதி ஆடு வழங்குவதற்கு திருச்செந்தூர் யூனியன் அம்மன்புரம், கோவில்பட்டி யூனியன் இடைச்செவல் ஆகிய இரண்டு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிராமத்திற்கு தலா 30 பேர் வீதம் 60 பயனாளிகள் ஆடு பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய ஆடுகள் கால்நடைத்துறை மூலம் இந்த பகுதியிலே வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.