/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/குச்சி கிழங்கு அறுவடை பணி தீவிரம் :விவசாயிகள் நேரடி விற்பனைகுச்சி கிழங்கு அறுவடை பணி தீவிரம் :விவசாயிகள் நேரடி விற்பனை
குச்சி கிழங்கு அறுவடை பணி தீவிரம் :விவசாயிகள் நேரடி விற்பனை
குச்சி கிழங்கு அறுவடை பணி தீவிரம் :விவசாயிகள் நேரடி விற்பனை
குச்சி கிழங்கு அறுவடை பணி தீவிரம் :விவசாயிகள் நேரடி விற்பனை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் குச்சி கிழங்கு அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதிக அளவில் விவசாயிகள் வீரிய ரக கிழங்குகளை பயிர் செய்து வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் மட்டும் நாட்டு ரக குச்சி கிழங்குகளை பயிர் செய்து விற்பனை செய்கின்றனர். தற்போது, பாலக்கோடு, தர்மபுரி தாலுகா பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த குச்சி கிழங்குகள் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விவசாயிகளை விட வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைத்து வரும் நிலையில், பல விவசாயிகள் தற்போது, தங்கள் தோட்டங்களில் அறுவடை செய்யும் கிழங்குகளை சாலையோரங்களில் கடை விரித்து விற்பனன செய்ய துவங்கி விட்டனர். சாலையோரங்களில் விற்பனை செய்யப்படுவதால், அந்த வழியாக செல்வோர் குச்சி கிழங்குகளை வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ கிழங்கு 15 ரூபாய்க்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். விற்பனைக்கு ஏற்றவாறு கிழங்குகளை அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.