ADDED : ஆக 19, 2011 04:55 AM
மதுரை:மதுரை ஆண்டாள்புரம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் காளியம்மாள்(60).
நேற்று முன் தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அறிமுகமான பெண்
ஒருவர், முதியோர் உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி வீட்டிற்கு
வந்தார். இதற்காக விண்ணப்பத்தை காளியம்மாள் எடுக்க சென்றபோது, 'டிவி' மீது
இருந்த 4 பவுனை அப்பெண் திருடிச் சென்றார். சுப்பிரமணியபுரம் போலீசார்
விசாரிக்கின்றனர்.