/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விவசாய கூட்டமைப்பு தலைவருக்கு வரவேற்புவிவசாய கூட்டமைப்பு தலைவருக்கு வரவேற்பு
விவசாய கூட்டமைப்பு தலைவருக்கு வரவேற்பு
விவசாய கூட்டமைப்பு தலைவருக்கு வரவேற்பு
விவசாய கூட்டமைப்பு தலைவருக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 24, 2011 12:57 AM
சென்னிமலை: மத்திய அரசின் விவசாயிகள் விளைபொருட்கள் உற்பத்தி மற்றும் சந்தைக்கான கூட்டுறவு சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு, டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
கூட்டமைப்பு தென்னிந்திய தலைவராக இளைஞர் காங்கிரஸ் ஈரோடு லோக்சபா தொகுதி துணைத் தலைவரும், ஸ்ரீராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளருமான மக்கள் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னிமலை வந்த மக்கள் ராஜனுக்கு, காங்கிரஸ் கட்சியினர், விவசாய சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர். சென்னிமலையில் உள்ள தியாகி குமரன் சிலைக்கு, அவர் மாலையணிவித்தார்.


