/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பண்பொழி திருமலைக்கோயிலில்17ம் தேதி மாதாந்திர முழுகாப்பு வழிபாடுபண்பொழி திருமலைக்கோயிலில்17ம் தேதி மாதாந்திர முழுகாப்பு வழிபாடு
பண்பொழி திருமலைக்கோயிலில்17ம் தேதி மாதாந்திர முழுகாப்பு வழிபாடு
பண்பொழி திருமலைக்கோயிலில்17ம் தேதி மாதாந்திர முழுகாப்பு வழிபாடு
பண்பொழி திருமலைக்கோயிலில்17ம் தேதி மாதாந்திர முழுகாப்பு வழிபாடு
தென்காசி:பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் வரும் 17ம் தேதி மாதாந்திர முழுக்காப்பு வழிபாடு நடக்கிறது.பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் கடந்த 42 ஆண்டுகளாக தமிழ்மாத முதல் தேதியன்று மாதாந்திர முழுக்காப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
பின்னர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாத்தப்பட்டு மா பொடி, மஞ்சாள் பொடி, திரவியம், 108 லிட்டர் பால், பஞ்சாமிர்தம், தயிர், தேன், இளநீர், விபூதி, அன்னம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலையில் நெய் விளக்கு ஏற்றப்படுகிறது. இரவு சுவாமி உற்சவருக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. கபால பைரவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.காலை முதல் இரவு வரை மாதாந்திர முழுக்காப்பு அடியார்களால் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி, அறங்காவலர் குழுவினர், ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி, முழுக்காப்பு அடியார்கள் செய்து வருகின்றனர்.