தி.மு.க., கவுன்சிலர் திடீர் விலகல்
தி.மு.க., கவுன்சிலர் திடீர் விலகல்
தி.மு.க., கவுன்சிலர் திடீர் விலகல்
சேலம்: சேலம் மாநகராட்சியில், மூன்று முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட, அஸ்தம்பட்டி பகுதி தி.மு.க., செயலாளர் நடேசன், கட்சியில் இருந்து விலகினார்.
நேற்று, தி.மு.க., வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து, கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பினார். தொடர்ந்து, அஸ்தம்பட்டி மண்டலத்தில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட, வேட்பு மனு தாக்கல் செய்தார்.ராஜினாமா குறித்து நடேசன் கூறியதாவது:கட்சியில் பல ஆண்டாக உழைத்திருக்கிறேன். திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளேன். கட்சியில் இருந்து வெற்றி பெற்றால், அந்த செல்வாக்கில் வெற்றி பெற்றதாக கூறுவார்கள். அதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு கூறினார்.நடேசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகள் பலரும், தி.மு.க., வில் இருந்து விலகுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.