"தி.மு.க.,வின் கருவியாக செயல்படவில்லை': பரஞ்ஜோதி 2வது மனைவி விளக்கம்
"தி.மு.க.,வின் கருவியாக செயல்படவில்லை': பரஞ்ஜோதி 2வது மனைவி விளக்கம்
"தி.மு.க.,வின் கருவியாக செயல்படவில்லை': பரஞ்ஜோதி 2வது மனைவி விளக்கம்
சென்னை: '' தி.மு.க.,வின் கருவியாக நான் செயல்படவில்லை,'' என திருச்சி மேற்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதியின் இரண்டாவது மனைவி ராணி கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: நானும், பரஞ்ஜோதியும் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.
இந்த விஷயங்கள் முதல்வரின் கவனத்துக்கு வந்திருக்காது எனக் கருதி, பத்திரிகைகள் மூலமாக உங்கள் கவனத்துக்கு கொண்டு வரவே, பேட்டி கொடுத்தேன். 'தற்போது என்னிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தும் பொய், நான் தி.மு.க.,வின் கருவியாக செயல்படுகிறேன்' என, அவர் கூறுவது முற்றிலும் தவறு. டாக்டர் என்ற முறையில், பணி நிமித்தமாகவே அமைச்சர் நேருவை சந்திக்க நேர்ந்தது. முதல்வர் அழைத்தால், நேரில் வந்து எல்லா ஆதாரங்களையும் காண்பிக்க தயாராக உள்ளேன். இவ்வாறு கடிதத்தில் ராணி கூறியுள்ளார்.