/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/போலீஸ் உட்கோட்டங்களில் குறைதீர் கூட்டம்: எஸ்.பி., தகவல்போலீஸ் உட்கோட்டங்களில் குறைதீர் கூட்டம்: எஸ்.பி., தகவல்
போலீஸ் உட்கோட்டங்களில் குறைதீர் கூட்டம்: எஸ்.பி., தகவல்
போலீஸ் உட்கோட்டங்களில் குறைதீர் கூட்டம்: எஸ்.பி., தகவல்
போலீஸ் உட்கோட்டங்களில் குறைதீர் கூட்டம்: எஸ்.பி., தகவல்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்திலுள்ள போலீஸ் உட்கோட்ட தலைமையிடங்களில், டி.எஸ்.பி., தலைமையில், குறைத்தீர் கூட்டங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், என தர்மபுரி மாவட்ட புதிய எஸ்.பி., அமீத்குமார்சிங் தெரிவித்துள்ளார்.
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விஷேகங்களுக்கு சரக்கு வாகனம் வைத்துச் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக பஸ் மற்றும் ஆட்களை ஏற்றிசெல்லும் வாகனங்களை குறைந்த வாடகைக்கு வழங்குவது குறித்து போக்குவரத்து துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். நில அபகரிப்பு மற்றும் பல்வேறு பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில், நிலஅபகரிப்பு தொடர்பாக, 700 மனுக்கள் பெறப்பட்டு, 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து, 94438-79777 என்ற மொபைல்ஃபோனில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம், என்றார்.


