/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிங்கம்புணரி பேரூராட்சியில் ரூ. 51லட்சம் பணிக்கு ஒப்புதல்சிங்கம்புணரி பேரூராட்சியில் ரூ. 51லட்சம் பணிக்கு ஒப்புதல்
சிங்கம்புணரி பேரூராட்சியில் ரூ. 51லட்சம் பணிக்கு ஒப்புதல்
சிங்கம்புணரி பேரூராட்சியில் ரூ. 51லட்சம் பணிக்கு ஒப்புதல்
சிங்கம்புணரி பேரூராட்சியில் ரூ. 51லட்சம் பணிக்கு ஒப்புதல்
ADDED : செப் 19, 2011 10:45 PM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி பேரூராட்சி கடைசி கூட்டம் நடந்தது.
தலைவர் சுசிலா தலைமை வகித்தார்.செயல் அலுவலர் மங்களேஸ்வரன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் முத்துமுகமது,கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த கவுன்சிலர்கள், அலுவலர்களுக்கு தலைவர் சுசிலா நன்றி தெரிவித்தார். சிங்கம்புணரி பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்ட சர்வே முடிந்துள்ளதால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வேங்கைப்பட்டி ரோட்டில் பாலாற்று கரையில் இடம் தேர்வு செய்யப்பட்டது.டுபிட்கோ நிறுவன சுழற்சி நிதி ரூ 51.லட்சத்தில் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கடை மாடிகளில் கடைகள் கட்டவும்,பேரூராட்சிக்கு சொந்தமான நகர் மண்டபத்தை மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


