ADDED : செப் 18, 2011 10:16 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி திம்மங்குத்து கிராமத்தில் வரும் 22ம் தேதி
மனுநீதிநாள் கூட்டம் நடக்கிறது. பொள்ளாச்சி தாலுகா ராமபட்டிணம்
உள்வட்டத்திற்கு உட்பட்ட திம்மங்குத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்
காலை 10.00 மணிக்கு கூட்டம் நடக்கிறது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் அருண்
சுந்தர் தயாளன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், பொதுப்பிரச்னைகள்,
நலத்திட்ட உதவி வேண்டி மனு கொடுக்கலாம்.
மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்கப்படும். இத்தகவலை தாசில்தார் சின்னப்பையன் அறிவித்துள்ளார்.