/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/காட்டுஎடையாரில் வாலிபர் சங்க கூட்டம்காட்டுஎடையாரில் வாலிபர் சங்க கூட்டம்
காட்டுஎடையாரில் வாலிபர் சங்க கூட்டம்
காட்டுஎடையாரில் வாலிபர் சங்க கூட்டம்
காட்டுஎடையாரில் வாலிபர் சங்க கூட்டம்
ADDED : செப் 11, 2011 10:58 PM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அடுத்த காட்டுஎடையாரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கருத்தரங்கம் நடந்தது.
இந்தியாவை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கிளை செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். தலைவர் விஜய்செந்தில் வரவேற்றார். பொருளாளர் சிவக்குமார், துணை தலைவர்கள் சிவபெருமாள், அய்யனார், சந்திரசேகர், இளையராஜா முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் வேல்முருகன் சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் ரகுராமன், நிர்வாகிகள் வெங்கடேசன், கந்தசாமி, முத்துகிருஷ்ணன், சின்னதம்பி, தனசேகர் கலந்து கொண்டனர்.