/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறையில் 11 உதவியாளர்களுக்கு அடித்தது திடீர் அதிர்ஷடம்தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறையில் 11 உதவியாளர்களுக்கு அடித்தது திடீர் அதிர்ஷடம்
தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறையில் 11 உதவியாளர்களுக்கு அடித்தது திடீர் அதிர்ஷடம்
தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறையில் 11 உதவியாளர்களுக்கு அடித்தது திடீர் அதிர்ஷடம்
தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறையில் 11 உதவியாளர்களுக்கு அடித்தது திடீர் அதிர்ஷடம்
ADDED : செப் 22, 2011 12:03 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட வருவாய்துறையில் 11 உதவியாளர்கள் தற்காலிகமாக துணைத் தாசில்தார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட வருவாய்துறையில் தற்போது உதவியாளர்களாக பணியாற்றி வருவோருக்கு தற்காலிக பதவி உயர்வு அளித்து துணைத் தாசில்தார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் ஆஷீஷ்குமார் உத்தரவின் பேரில் பி.ஏ.ஜி தமிழ்செல்வி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி சப்கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த நம்பிராயர் பதவி உயர்வு பெற்று சாத்தான்குளம் தாலுகா கூடுதல் தலைமையிடத்து துணை த் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவ ட்ட ஆதிதிராவிட நல அலுவலக உதவியாளர் நாகசுப்பிரமணியன் பதவி உயர்வு பெற்று மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலக கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கலெக்டர் அலுவலக உதவியாளர் அழகர் கலெக்டர் அலுவலக தலை மை உதவியாளர் டி பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விளாத்திகுளம் தாலுகா அலுவலக உதவியாளர் சேதுராமன் பதவி உயர்வு பெற்று விளாத்திகுளம் தாலுகா தனித்துணை தாசில்தார் (தேர்தல்) நியமிக்கப்பட்டுள்ளார்.கலெக்டர் அலுவலக உதவியாளர் பரமசிவன் கலெக்டர் அலுவலக ஜே பிரிவு தலை மை உதவியாளராக நியமிக்கப்பட்டுள் ளார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ அலுவலக உதவியாளர் ராஜீவ்தாகூர் ஜேக்கப் திருச்செந்தூர் தாலுகா அலுவலக மண்டல துணைத் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவில்பட்டி தாலுகா அலுவலக உதவியாளர் ராஜ்குமார் பதவி உயர்வு பெற்று கோவில்பட்டி தாலுகா அலுவலக தலைமையிடத்து துணைத் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்செந்தூர் தாலுகா அலுவலக உதவியாளர் ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் . திருச்செந்தூர் தாலுகா அலுவலக உதவியாளர் மகாதேவன் திருச்செந்தூர் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை த் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். கலெக்டர் அலுவலக உதவியாளர் லிங்கராஜ் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலக உதவியாளர் செல்வக்குமார் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணைத் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.