Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆட்டையாம்பட்டியில்வேட்பு மனு மந்தம்

ஆட்டையாம்பட்டியில்வேட்பு மனு மந்தம்

ஆட்டையாம்பட்டியில்வேட்பு மனு மந்தம்

ஆட்டையாம்பட்டியில்வேட்பு மனு மந்தம்

ADDED : செப் 28, 2011 01:31 AM


Google News
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி பேரூராட்சி தலைவர் மற்றும் 15 வார்டுகளுக்கு, உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பு மனு பெறப்பட்டு வருகிறது.

இங்கு, ஆண் வாக்காளர்கள் 4,948 பேரும், பெண் வாக்காளர்கள் 4,873 பேர் என மொத்தம் 9,821 பேர் உள்ளனர். பேரூராட்சி தலைவர் பதவிக்கு, பா.ஜ., சார்பில் ஒருவர், வார்டு உறுப்பினர் ஒருவர் என இரண்டு பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.வரும் நாட்களில், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருப்பதால், பேரூராட்சி அலுவலகம் சுறுசுறுப்பாக காணப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us