ராமச்சந்திரா பல்கலை பட்டமளிப்பு விழா
ராமச்சந்திரா பல்கலை பட்டமளிப்பு விழா
ராமச்சந்திரா பல்கலை பட்டமளிப்பு விழா
சென்னை:''அடுத்த 10 ஆண்டுகளில், மருந்து கண்டுபிடிப்பு துறையில் இந்தியாவும், சீனாவும் உலக நாடுகள் மத்தியில் தனித்துவம் பெறும்'' என்று, இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ மையத்தின் இயக்குனர் டாக்டர் ராம் விஸ்வகர்மா கூறினார்.போரூர், ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக் கழகத்தின், 14வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக் கழக துணைவேந்தர் ரங்கசாமி வரவேற்றார்.
இதற்கு, நடைமுறையில் உள்ள சில மருந்துகளின் பின்விளைவாக, மருந்துகள் திரும்ப பெறப்படுவதும் ஒரு காரணமாகும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறி,இந்தியாவும், சீனாவும் மருந்து கண்டுபிடிப்பு துறையில் தனித்துவம் பெறும்.
இன்றைய சூழலில், ராமச்சந்திரா போன்ற உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வு வசதிகள் கொண்ட ஒரு பல்கலைக் கழகம், மருந்து தயாரிப்பு துறைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. இவ்வாறு டாக்டர் ராம் விஸ்வகர்மா பேசினார்.சிறப்பு விருந்தினரை பல்கலைக் கழக வேந்தர் வெங்கடாச்சலம் கவுரவித்தார். 36 மாணவர்களுக்கு தங்க பதக்கங்களும், 343 பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கும், 359 பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் பட்ட இதழ்கள் வழங்கப்பட்டன.