/உள்ளூர் செய்திகள்/மதுரை/லாரி டிரைவரிடம் பணம் மொபைல் போன் பறிப்புலாரி டிரைவரிடம் பணம் மொபைல் போன் பறிப்பு
லாரி டிரைவரிடம் பணம் மொபைல் போன் பறிப்பு
லாரி டிரைவரிடம் பணம் மொபைல் போன் பறிப்பு
லாரி டிரைவரிடம் பணம் மொபைல் போன் பறிப்பு
ADDED : செப் 22, 2011 12:30 AM
திருநகர் : திருநகர் அருகே பெண்ணைக் காட்டி லாரி டிரைவரிடம் பணம், மொபைல் போன்களை மர்ம கும்பல் பறித்து சென்றது.தூத்துக்குடியிலிருந்து கோவைக்கு இரும்பு கழிவுகளை ஏற்றிக் கொண்டு லாரி நேற்று அதிகாலை திருநகர் ரிங்ரோடு, சம்பக்குளம் விலக்கு வந்தது.
அங்கு ஒரு பெண் லாரியை நிறுத்தும்படி கூறினார். லாரியை ஓட்டி வந்த கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த டிரைவர் கலாதரன் நிறுத்தினார். அப்போது மறைந்திருந்த ஐந்துபேர், டிரைவர் கலாதரன், கிளீனர் வினோத்தை தாக்கி, ரூ. 25 ஆயிரம் மற்றும் மூன்று மொபைல் போன்களை பறித்துக்கொண்டு பெண்ணுடன் தப்பினர். திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


